Skip to main content

"இவர் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்" - இயக்குநர் மிஷ்கின் பேட்டி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

"He is my favorite actor" - director Miskin interview!

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘DSP’. இந்தப் படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதியும், கதாநாயகியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (25/11/2022) இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், 'DSP' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டார். விழாவில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் மிஷ்கின், "DSP இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். தம்பி பொன்ராம் எனக்கு நெருங்கிய நண்பர். படம் ரொம்ப நன்றாக இருக்கும். வாழ்த்த வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய நான் நெஞ்சார வாழ்த்துகிறேன். நன்றி" எனத் பேசினார்.

 

"He is my favorite actor" - director Miskin interview!

 

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வைபவ், "எல்லோருக்கும் வணக்கம். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. விஜய்சேதுபதி நடித்த 'DSP' படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது. ரொம்ப ரொம்ப சந்தோசம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. போலீஸ் வேடத்தில் நடித்த விஜய்சேதுபதியின் அனைத்து படங்களும் வெற்றி அடைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜாவுக்கும் யுவனுக்கும் அமைந்தது... கார்த்திக்குக்கு அமையாதது...! மீண்டும் அழைத்து வந்த மிஷ்கின்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

 

Set for Ilayaraja and Yuvan ... not for Karthik ...! Mishkin brought back!

 

'உச்சந்தலை ரேகையிலே...' என சித் ஸ்ரீராமின் குரலில் பாடல் தொடங்கும்பொழுதே அது உயிருள்ள பாடல் என்ற உணர்வு நமக்கு வருகிறது. கபிலன் எழுதியுள்ள அந்தப் பாடல், கார்த்திக் ராஜாவின் இசையில் மிஷ்கினின் 'பிசாசு 2' படத்துக்காக உருவாகியுள்ள பாடல். இன்று (02/10/2021) வெளியாகியிருக்கிறது. 

 

'வள்ளி படத்துக்கு இசையமைச்சது இவர்தான்', 'இளையராஜாவின் இசை வாரிசா வரப்போறவர்' என்றெல்லாம் அறிமுக காலத்தில் பேசப்பட்டவர், எதிர்பார்க்கப்பட்டவர் கார்த்திக் ராஜா. இப்போதும்  ரசிகர்களின் 'அடிக்ஷனாக' இருக்கும் இளையராஜாவின் இளைய மகன் யுவனுக்கு முன்பே இசைப்பயணத்தை தொடங்கி பல ஹிட்களையும் கொடுத்தவர். மிகுந்த அழுத்தத்தை கொடுக்காமல், அதே நேரம் மேலோட்டமாகவோ, டெம்ப்ளேட் மெலடியாகவோ இல்லாமல் மனதை தொட்டு உறவாடும் பாடல்கள் கார்த்திக் ராஜாவின் ஸ்பெஷல்.

 

'உல்லாசம்' படத்தின் 'வீசும் காற்றுக்கு' பாடல் இந்த வகையின் சிறந்த உதாரணம். 'டும் டும் டும்' படத்தில் 'ரகசியமாய்..', 'உன் பேரை சொன்னாலே' இரண்டு பாடல்களும் இப்படி இருக்கும். அந்த காலகட்டத்திற்கு நவீனமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஒலி, மெட்டு வகையை பயன்படுத்தியிருப்பார் கார்த்திக் ராஜா. காதல் சோகம் என்று வந்துவிட்டால், கார்த்திக்கின் பாடல்களிலேயே அந்த வெறுமை தெரியும். 'உல்லாசம்' படத்தில் வரும் 'யாரோ யார் யாரோ...', 'உள்ளம் கொள்ளை போகுதே' படத்தின் 'கவிதைகள் சொல்லவா' (சோக வெர்ஷன்) இரண்டும் இந்த வகை. 

 

கமல்ஹாசனின் 'காதலா காதலா', விஜயகாந்த்தின் 'அலெக்சாண்டர்' உள்ளிட்ட சில பெரிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார் கார்த்திக் ராஜா. ஆனாலும் இசையமைத்த படங்கள் பெரும் வெற்றியைப் பெறாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் பெரிய இடத்தை அடையமுடியாமல் போனது. தந்தை இளையராஜாவுக்கும் தம்பி யுவனுக்கும் அமைந்து, இவருக்கு அமையாமல் போனது சரியான கூட்டணி, நட்பு. இளையராஜாவின் ஆரம்பக் காலத்திலேயே பாரதிராஜா உள்ளிட்ட பலர் படத்தின் வெற்றி - தோல்வி தாண்டி தொடர்ந்து அவருடன் பயணித்தனர். அதையெல்லாம் விட, இளையராஜாவின் நுழைவு ஒரு சூறாவளி போல அமைந்து தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அந்த காலகட்டத்தில் அவரது இசை, அனைவரையும் அவரை தேடி வர வைத்தது. யுவனுக்கு அப்படி அல்ல... வெற்றிகள் மெதுவாகத்தான் வந்தன. செல்வராகவன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, அமீர் என்று ஆரம்பக் கால நட்புகள் வெற்றிக் கூட்டணியாக அமைந்து யுவனையும் வெல்ல வைத்தன.

 

இந்த இரண்டும் கார்த்திக் ராஜாவுக்குச் சரியாக அமையவில்லை. ஆனாலும், அவர் சில மிகச் சிறந்த பாடல்களைத் தந்துள்ளார். நல்ல படம் அமைந்தால் அவர் பயணம் தொடரும் என்று அவரது பாடல்களை ரசித்த பலர் காத்திருந்தனர். அப்படி ஒரு தருணமாக மிஷ்கின் அவரை 'பிசாசு 2'வில் அழைத்து வந்துள்ளார். 'உச்சந்தலை ரேகையிலே...' அந்த நம்பிக்கையை நமக்குத் தருகிறது.                    

                    

Next Story

மிஷ்கினுடன் இணையும் விஜய்சேதுபதி!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Vijay Sethupathi joins Mishkin

 

2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிய படம் ‘பிசாசு’. இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின், பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். 

 

இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கான சில காட்சிகளை திண்டுக்கல்லிலும், ஏலகிரியிலும் படப்பிடிப்பு செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்தப் படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றது. அதற்காக நடிகர் விஜய் சேதுபதி திண்டுக்கல் சென்றுள்ளார். இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.