Skip to main content

பிரபல நடிகரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ரௌடி! 

Published on 20/08/2020 | Edited on 20/08/2020
salman

 

 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிப்பு நிறுவனம், தொண்டு நிறுவனம் என்று பல துறைகளில் கால்பதித்துள்ளார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

 

இந்த வருடத்திற்கான பிக்பாஸ் ப்ரோமோ அண்மையில்தான் வெளியாகி பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் ரௌடி ஒருவர், தான் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

வேறு ஒரு வழக்கில் ஹரியானா காவல்துறை ராகுல் என்பவரை கைது செய்துள்ளது. இவர் லாரன்ஸ் பிஸோனி கேங்கை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள சல்மான் கான் அப்பார்ட்மென்ட் அருகில் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மான் வேட்டையாடிய வழக்கு காரணமாக அவர் சல்மானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸிடம் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Shooting in front of Salman Khan house!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பின்பு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.  சல்மான் கனுக்கு ஒயிட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு  நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது