Advertisment

கரோனா தடுப்பூசி... வேண்டுகோள் விடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்!

harris jeyaraj

கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய கரோனா பரவல் கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்தது. இதனையடுத்து, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வந்தநிலையில், கரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது.

Advertisment

இதற்கிடையே, தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தடுப்பூசி செலுத்திய கையோடு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி பொதுமக்களையும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 'தாமதிக்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

harris jayaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe