Skip to main content

ரொமாண்ஸ் பண்றதிலும் இந்த கேரக்டர் ரொம்ப வித்தியாசமானவன்...- ஹரிஸ் கல்யாண் அனுபவங்கள்

Published on 16/03/2019 | Edited on 16/03/2019


இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் ஹீரோவாக நடித்துள்ள ஹரிஸ் கல்யாண் இதற்குமுன் பியார் ப்ரேமா காதல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். ஐ.ஆர்.ஐ.ஆர் படத்திலும் ஒரு மொரடான காதல் ஹீரோவாக வலம்வருகிறார். அவர் இந்தப் படத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களின் தொகுப்பு. 

 

harish kalyan

 

ஒரு படத்தின் ரிலீஸ் என்பது குழந்தைப் பிறக்கிற மாதிரியான எக்ஸைட்டான விஷயம். அந்த உணர்வில்தான் நாங்கள் இருக்கிறோம். இதற்குமுன் நான் நடித்தப் படமும் காதல் படமாக இருந்தாலும் அதில் வருகிற கேரக்டரும் இதில் இருக்கிற கேரக்டரும் வித்தியாசமானது. யார் இந்தப் பையன், ஏன் இவ்வளவு கோவப்படுறான், இவனுக்கு என்ன நடந்துச்சு? இவன் எப்படி ஒரு அழகான சாதுவான பெண்ணை சந்திக்கிறான்? எப்படி இவங்களுக்குள்ள லவ் வருது. அதோட இப்ப இருக்கிற சமூக சூழ்னிலையில பொண்ணுங்க எப்படி பிஹேவ் பண்ணுறாங்க, அதுக்கு பசங்க எப்படி ரியாக்ட் பண்ணுறாங்க, பசங்களோட பிகேவியருக்கு பொண்ணுங்க எப்படி ரியாக்ட் பண்ணுறாங்க? போன்றக் கேள்விகளுக்கு படி படியாக பதில் கொடுக்கிற படம்தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.  
 

பியார் ப்ரேமா காதல் படத்தில் கொஞ்சம் அமைதியான கேரக்டரில் நடித்திருப்பேன். ஆனால், இந்தப் படத்தில் ஒரு கோபமான பையனாக நடிச்சுருக்கேன். அமைதியான கேரக்டரில் நடிக்கும்போது எனக்கு சுலபமா இருந்துச்சு, இந்த படத்தில் வரும் கேரக்டரை என்னால் பண்ண முடியுமானு சந்தேகத்தோடவே நடிச்சேன். ஆனால், இப்போ எந்த மாதிரி கேரக்டரும் பண்ணமுடியும்னு என்கிற அளவுக்கு நம்பிக்கை வந்துடுச்சு. ஏனென்றால், இந்த கேரக்டருடன் என்னை இணைத்துக்கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டேன். நான் அந்த கேரக்டரில் இணைந்த மாதிரி படத்தைப் பார்க்கிறவர்களும் இணைந்துவிட்டால் படம் வெற்றியடைஞ்சுடும்.
 

இந்தப் படத்தில் வருகிற கௌதம் கேரக்டர் பற்றிச் சொல்லனும்னா, எல்லோரும் கோபம் வந்தால் தரையையோ, இல்ல வேற எதயாவது அடிப்போம், நகத்தைக் கடிப்போம். ஆனால், அவன் பாக்ஸிங் பண்ணுவான், பைக் எடுத்துக்கிட்டு எங்கயாவது போய்டுவான், அது நிறைய விஷயங்களைப் பண்ணுவான். ஆனால் அவன் பாக்ஸரோ, பைக் ரேஸரோ இல்லை. ரொமாண்ஸ் பண்றதிலும் இந்த கேரக்டர் ரொம்ப வித்தியாசமானவன். சாதாரணமாகவே இவன் ரொம்ப கோவக்காரன், எல்லாத்துக்கு மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு சண்டப் போடுற ஒரு பையன் இவனுக்கு எப்படி லவ் வரும் என்கிற இயல்பாவே பார்வையாளருக்கு வந்துருக்கும். இதில் வருகிற காட்சியெல்லாம் இயக்குனரோட பாணியில் இப்போ நடக்கிற விஷயங்களோடு ஒப்பிட்டுதான் இருக்கும். லவ் பண்றவுங்க, லவ் பண்ணி பிரிஞ்சவுங்க, கல்யாணம் பண்ணிக்கிட்டவுங்க எல்லாருக்கும் இது கனேக்ட் ஆகும்.
 

எல்லோரும் பார்க்கக் கூடிய படமாக இருந்தாலும் இதுக்கு யு/ஏ சர்டிஃபிக்கேட் கொடுத்ததிற்கு காரணம் படத்தின் மையக் கருத்துதான் என நினைக்கிறேன். கதையிலும், அதில் வருகிற காதல் காட்சிகளிலும் இருக்கிற ஆழமான கருத்துக்கள், அதோட இருளடைந்த மறுப்பக்கம் இதேல்லாம் ஒரு வகையான வன்முறையாக அவங்க நினைச்சுருக்காங்க. அதனால் தான் இதற்கு யு/ஏ கொடுத்திருக்காங்க. என்று ஹரீஸ் கல்யாண் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திரிஷாவின் கண்டனம்; சில மணிநேரத்தில் வீடியோ வெளியிட்ட ஏ.வி. ராஜு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Trisha's Condemnation; AV released the video within an hour. Raju

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

mm

இந்நிலையில் ஏ.வி.ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.