Advertisment

"தயங்காமல் நீங்களும் என்னைப்போல் செய்யுங்கள்!" - ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்!

gdgdgdgv

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

Advertisment

fsvsvds

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹரிஷ் கல்யாண், "கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டேன்! யாரும் தயங்க வேண்டாம். தடுப்பூசி போடுங்கள். முகமூடிகள் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்! கரோனா சங்கிலியை உடைப்போம்!" என குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

harish kalyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe