"உன் தந்தையின் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன் அன்பு சகோதரா" - ஹரிஷ் கல்யாண் வேதனை!

bbdbdbfs

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் பால சரவணன், பின்னர் ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘ஒருநாள் கூத்து’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவரது தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன், கரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், நேற்று (11.06.2021) சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகிற நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பால சரவணன் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "உன்தந்தையின் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன் அன்பு சகோதரா பாலா!. உனக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். மன வலிமையுடன் இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe