Skip to main content

சந்தானத்துடன் கைகோர்க்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்...

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

சமீபத்தில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் “அக்யூஸ்ட் நம்பர் ஒன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார் சந்தானம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து டகால்டி என்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். இந்த படத்தின் போஸ்டரில் புகை பிடிப்பதுபோல போஸ் கொடுத்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. பின்னர் சந்தானம் இதற்கான மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். மேலும் இரண்டு வருடங்களாக ரிலீஸாகமல் தள்ளி தள்ளி போய்க்கொண்டிருக்கிறது சர்வர் சுந்தரம்.
 

harbajan singh

 

 

இந்நிலையில்தான் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கப் போகிறார் சந்தானம் அதுவும் மூன்று வேடங்களில் நடிக்கிறார் அப்படத்தின் பெயர் டிக்கிலோனா என்று அறிவிப்பு வந்தது. பல படங்களில் நடிகராகவும், திரைக்கதையில் பணிபுரிந்தும் வந்த கார்த்தி யோகி டிக்கிலோனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.
 

இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ்.சினிஸும் இப்படத்தினை தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது படக்குழு. ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இணைந்ததில் இருந்து தமிழில் பல ட்வீட்களை பதிவு செய்து அசத்தி வருகிறார். பலரும் இவரை வள்ளூவர் என்று கிண்டலடித்தும் வருகின்றனர். அந்தளவிற்கு தமிழில் நாட்டம் கொண்டதுபோல் ட்வீட் செய்து வரும் நிலையில் தமிழ் படத்தில் ஹர்பஜன் நடிப்பது தமிழ் ரசிகர்களுக்கு குஷியோ குஷி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

Next Story

“கடவுள் நம்பிக்கையை அரசியல் பண்றது தப்பு” - சந்தானம்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
santhanam about god beleif in  Vadakkupatti Ramasamy success meet

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. முன்னதாக ட்ரைலர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ஒரு வசனம் பெரியாரை அவதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையானது. பின்பு இசை வெளியீட்டில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என சந்தானம் விளக்கமளித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், கார்த்திக் யோகி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதிலளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வச்சு காசு பண்றது தப்பு. அதே மாதிரி கடவுள் நம்பிக்கை வச்சு அரசியல் பண்றதும் தப்பு. இதைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லாதவங்களுக்கு இல்லை. அதனால் இரண்டு பேருக்குமே பொதுவாகத்தான் வச்சிருக்கோம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது இருக்கு. நான் சாமி கும்புடுகிறவன். ஒரு ஆன்மீகவாதி” என்றார்.