Skip to main content

ஈபிள் டவரில் ப்ரொபோசல் - வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

Hansika introduced her future husband Sohael Khaturiya

 

தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக, தமிழில் தனது 50வது படமான 'மஹா' படத்தில் நடித்திருந்தார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

 

ad

 

இதனையடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் எமோஷனல் ஹாரரை அடிப்படையாகக் கொண்டு  காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 

அண்மையில், ஹன்சிகாவின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஹன்சிகா அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி சோஹேல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்யவுள்ளார். இவர் தொழிலதிபர் எனச் சொல்லப்படுகிறது.
 

மேலும், இது தொடர்பான  சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் ஹன்சிகாவிடம் ப்ரொபோஸ் செய்கிறார் சோஹேல் கதுரியா. அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஹன்சிகா என்றென்றும் அன்புடன் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் ஹன்சிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.   
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.