Skip to main content

தோழியின் கணவரைக் கரம் பிடிக்கும் ஹன்சிகா

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

hansika future husband Sohail Kathuria's is already married to his friend

 

தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக, தமிழில் தனது 50வது படமான 'மஹா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 

ad

 

இதனிடையே ஹன்சிகா சில தினங்களுக்கு முன்பு தனது வருங்கால கணவர் சோஹைல் கதுரியா என்பவரை அறிமுகப்படுத்தினார். சோஹைல் கதுரியா தொழிலதிபர் எனச் சொல்லப்படுகிறது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் ஹன்சிகா திருமணம் செய்யவுள்ள சோஹைல் கதுரியா, ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வைரலாகி வருகிறது. சோஹைல் கதுரியா, கடந்த 2016ஆம் ஆண்டு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரிங்கு, ஹன்சிகாவின் தோழி எனக் கூறப்படுகிறது. 

 

மேலும், ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் திருமணத்தில் சோஹைல் கதுரியாவும் பங்கேற்றுள்ளதாக பேசப்படுகிறது. அவர் ஹன்சிகா மோத்வானிக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குதாரராக இருந்துள்ளார் எனவும் அதே சமயம் தனியாக ஜவுளி நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.  

 

சோஹைல் கதுரியா தனது முன்னாள் மனைவியான ரிங்குவை சில காரணங்களால் விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.