உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி, உறைவிடமின்றி தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பசி பட்டினியுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களில் சில தரப்பினர் வீடு திரும்ப அரசாங்கமும், பிரபலங்களும் உதவி வருகின்ற நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா ஷமீம் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''வெறும் வயிற்றில், சுமை தூக்கி, கால்கள் வெடிக்க, பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு தண்ணி கொடுக்க முடியாமல் வெதும்பிய மன நிலையில் பாலைவனமான நெடுஞ்சாலைகளில், உயிரைப் பிடித்துக் கொண்டும், பெட்டிகளை இழுத்து கொண்டும் நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம், இனி நடக்காமல் இருக்க, ஓங்கட்டும் பசியின்குரல்'' எனப் பதிவிட்டுள்ளார்.