கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கின்றனர். அதேபோல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி (நாளை) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் டாஸ்மாக் திறப்பது குறித்து அஜித்தின் "வலிமை" பட இயக்குனர் எச்.வினோத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள்'' எனத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.