Skip to main content

"அரசியல் ரீதியாக பேசப்பட வேண்டிய கதைக்களம் இது" - பட பூஜையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

gv prakash

 

சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ரெபெல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. 

 

ad

 

படத்தின் பூஜை விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், "ஞானவேல் சார் என்னுடைய கேரியரில் மிக முக்கியமானவர். வசந்த பாலன் சார் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி எனக்கென்று ஒரு பிசினஸ் வேல்யூ, மார்க்கெட் ஷேர் உருவாக்கி அடுத்த கட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றது ஞானவேல் சார்தான். 2015இல் தொடங்கி இன்றுவரை நடிகராக நான் பயணிப்பதற்கு அவர்தான் காரணம். அவருடன் இணைந்து மீண்டும் படம் பண்ணுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் இணைந்து இசை, நடிப்பு என நான் பண்ணிய அனைத்து படங்களுமே ஹிட் படங்கள். அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என நம்புகிறேன். இயக்குநர் நிகேஷ் முதல் தடவை கதை சொல்லும்போது ரொம்பவும் பிடித்திருந்தது. இது அரசியல் ரீதியாக பேசப்பட வேண்டிய கதைக்களம். சில கதைகள் கேட்கும்போதே இந்தக் கதைகள் நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்று நமக்குத் தோன்றும். அப்படி ஒரு கதையாக ரெபெல் கதை இருந்தது. அதை சரியாக செய்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

போன சம்மருக்கு மிஸ்ஸிங்; இந்த கோடையில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
gv prakash kalvan movie trailer released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இதனிடையே, 'கள்வன்' படத்தில் ஜி.வி பிரகாஷோடு, பாரதிராஜாவும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவானா கதாநாயகியாக நடிக்க தீனா, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாத்திங்களில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. 

gv prakash kalvan movie trailer released

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கும் பிறகு தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஏப்ரல் 4அம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.