Skip to main content

அவர்கள் ரசிகர்களே கிடையாது- அஜித் ரசிகர்கள் குறித்து பிரபல தயாரிப்பாளர்

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்தவர் ஞானவேல்ராஜா. தற்போது இவர் மகாமுனி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். மௌனகுரு என்ற படத்தை இயக்கிய சாந்தகுமார் எட்டு வருடங்கள் கழித்து ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் மகாமுனி. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
 

ajith fanS

 

 

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர் அஜித் குறித்து பேசியுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அதில், அஜித்திடம் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் பாசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. அஜித் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர், அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது, வெறியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர் தொடர்ந்து ஹிட் அதிகமாக கொடுக்கவில்லை என்றால் அவரது ரசிகர்களின் கோபப்படுவார்கள் அல்லது பின்வாங்குவார்கள். ஆனால், இவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்” என்று ஞானவேல்ராஜா அஜித் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தற்கொலைக்கு தூண்டியதாக புகார்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Complaint against producer Gnanavel Raja for jewells stolen issue

சென்னை தி.நகர் பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாக கூறப்படும் நிலையில் மீண்டும் விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக் கண்ட லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகைச்சை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பணிப்பெண் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும், தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கொடுத்துள்ளார்.

Next Story

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Producer Gnanavel Raja Housemaid incident

ஸ்டூடியோ கிரீன் என்ற பேனரில் திரைப் படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜா, தற்போது சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், கார்த்தியின் வா வாத்தியாரே உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார். 

இதனிடையே கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.