சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள இப்படம் வெந்து தணிந்தது காடு. கேங்ஸ்டர் கதையைமையமாக வைத்து எடுக்கப்பட்டுபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து கௌதம் மேனன் கமலை வைத்து ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கௌதம் மேனன் அடுத்ததாகபிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியைவைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாககூறப்படுகிறது. இப்படத்தின் பணிகளை முடித்த பிறகுதான் ’வேட்டையாடு விளையாடு 2’படத்தின் பணிகளை தொடங்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கௌதம் மேனன் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகளை விரைந்து முடித்து விரைவில் திரைக்கு கொண்டு வரதிட்டமிட்டுள்ளாராம்.