Skip to main content

“புரட்சித்தலைவர் - நடிகர் திலகம்னு வச்சுக்கோங்க...” - சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

gangai amaran answer about superstar designation 

 

சென்னையில் நடந்த ‘மேகத்தில் ஒன்றாய் நின்றோமே’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கங்கை அமரன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா பற்றியும் பாஜகவில் சேர்ந்தது குறித்தும் திமுகவில் சேரப்போகிறீர்களா என்றும் கேள்விகள் முன் வைக்கப்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பல்வேறு திரைப் பிரபலங்கள் கூறி வருகிற கருத்துக்களுக்கு தங்களுடைய கருத்து என்னவென்று கேள்விகள் கேட்கப்பட்டது. கலவையான கேள்விகளுக்கு அவரது பதில் பின்வருமாறு...

 

ஒரே கங்கை அமரன் தான் இந்த ஜென்மத்தில் சேர்ந்தது ஒரே கட்சியில்தான். அந்த கட்சியில் தான் உயிர் போகுற வரை இருப்பேன். நம்மை நாமே உணர்வதால், நான் கத்துவதால் எந்த பயனும் இல்லை என்று இனிமேல் அமைதியாகவே போய்விடுவேன். தனியார் ஊடகங்களின் பேட்டியின் போது என்னை அவதூறாகப் பேசியதால் கோவப்பட்டேன். கோவம் வர வேண்டிய இடத்தில் வந்தால்தான் மனிதன். சசிகலா சொத்து குவிப்பு வழக்கிற்காகத்தான் தண்டனை அனுபவித்து வந்துவிட்டார்கள் அவர்கள் குறித்து பேச வேறு ஒன்றுமில்லை.

 

கலைஞர் உயிருடன் இருந்தபோது அந்த குடும்பத்திற்கும் எங்களுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. தொடர்பு, உறவு என்பது வேறு கட்சி என்பது வேறு. மற்றபடி நான் எப்போதும் திமுகவில் இருந்ததில்லை. இனி சேரப்போவதுமில்லை. தெய்வீக நம்பிக்கை அதிகம் என்பதால் அதை சார்ந்த கட்சியான பாஜகவில் இருக்கிறேன்.

 

சூப்பர் ஸ்டார் பட்டம் இனி இவருக்குத்தான் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏன் இருக்குறவங்க பட்டத்திற்கு ஆசைப்படுகிறீர்கள். இல்லாதவங்க பட்டத்தை எடுத்துக்கங்களேன். புரட்சித்தலைவர், நடிகர் திலகம் எல்லாம் இப்போது இல்லை. அந்த பட்டத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்களேன் பார்க்கலாம் என்று அவருக்கே உரித்தான மாடுலேசனில் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பவதாரிணி பெயரில் பணம் சுருட்டிருக்காங்க” - கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
gangai amaranGanga Amaran accuses dhina saying embezzled the money with the signature of Bhavadharani

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு தினாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கங்கை அமரன், தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது தற்போது இசைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  “எங்க வீட்டில் ஒரு துக்க நிகழ்வு. அதனால் இளையாராஜாவால் வரமுடியவில்லை. அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியன் ஆரம்பிக்கப்பட்ட போது விதியின்படி, ஒருவருக்கு 2 வருட பதவி, அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருஷத்துக்கும் தலைவராக வேண்டும் என அடம்பிடிக்கிறார். 

அது போக யூனியனில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களாக பணம் கோரும் கடிதத்தை தயார் செய்துள்ளனர். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள். ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கும் மேல் சுருட்டியுள்ளனர். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார்” என்றார். 

மேலும் இளையாராஜா கூறியும் தினா மறுத்துவிட்டதாக சொன்ன கங்கை அமரன், “இளையராஜா தினாவிடம் ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ பண்றது சரியில்லை... என சொன்ன போது, அந்தாளு சும்மா உக்காந்து கத்திக்கிட்டு இருப்பான்... என பேசினார்” என்றார். மேலும் இளையராஜா பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.

Next Story

அஜித், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்?

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

New film to be act by Ajith and Vijay

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித், தற்போது போனி கபூர் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர்  நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

 

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். குடும்ப பின்னணி படமாக  உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  
 

இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இணைந்து ஒரு புதிய படம் நடிக்கவுள்ளதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும். ஏற்கனவே 1995-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.