Advertisment

"எவ்வளோவோ பாதுகாப்பு இருந்தும் கரோனா வந்துவிட்டது" - பிக்பாஸ் நடிகை வேதனை!

ghrdshdhdf

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் 4 புகழ் நடிகை கேப்ரில்லாவுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுதான் வந்தேன். ஆனாலும் கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன்தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள். அன்பை மட்டுமே பரப்புங்கள். கரோனாவைப் பரப்பாதீர்கள்'' என கூறியுள்ளார்.

gabriella
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe