Skip to main content

ரஜினி ரூ.100 கோடி, ரஹ்மான் ரூ.94.8 கோடி, விஜய், அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கிருக்காங்க தெரியுமா?

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

2019ஆம் ஆண்டிற்கான இந்தியளவில் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் ரஜினி முதலிடத்தை பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதுமான 100 பேர் கொண்ட பட்டியலில் ரஜினி 13 வது இடத்தையும், ஏ.ஆர். ரஹ்மான் 16வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இன்னும் சில பிரபலங்கள் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

rajnikanth


இந்திய அளவிலான பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, முதலிடம் பிடித்துள்ளார். அக்டோபர் 1, 2018  முதல் செப்டம்பர் 30, 2019 வரை ரூ. 253 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் விராட் கோலி.  பட்டியலில் அக்‌ஷய் குமாருக்கு 2ஆம் இடமும் சல்மான் கானுக்கு 3ஆம் இடமும் அமிதாப் பச்சனுக்கு 4ஆம் இடமும் தோனிக்கு 5ஆம் இடமும் கிடைத்துள்ளன. 
 

hero


மேலும் இந்த பட்டியல் என்பது பிரபலம் மற்றும் அவர்கள் பெரும் சம்பளம் ஆகியவற்றவை கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் தென்னிந்தியளவில் ரஜினி முதலிடமும் ரூ. 100 கோடி வருமானமும் ஈட்டியுள்ளார். ரூ. 94.8 கோடி வருமானத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் தென்னிந்தியளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியளவில் 16 இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 30 கோடி வருமானத்துடன் விஜய் தென்னிந்தியளவில் 5ஆம் இடமும், இந்தியளவில் 47ஆம் இடமும் ரூ. 40.5 கோடியுடன் அஜித் தென்னிந்தியளவில் 6ஆம் இடமும் இந்தியளவில் 52-ம் இடமும் பிடித்துள்ளார்கள். கமலின் ஆண்டு வருமானம் ரூ. 34 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய சினிமா பிரபலங்கள்
 

dabaang


13. ரஜினி
16. ஏ.ஆர். ரஹ்மான்
27. மோகன் லால்
44. பிரபாஸ்
47. விஜய்
52. அஜித்
54. மகேஷ் பாபு
55. ஷங்கர்
56. கமல்
62. மம்மூட்டி
64. தனுஷ்
77. திரிவிக்ரம்
80. இயக்குநர் சிவா
84. கார்த்திக் சுப்புராஜ்

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.