அஜித் மற்றும் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம்தான் விஸ்வாசம். இது நேற்று வெளியானது. இதனுடன் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படமும் வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியானதால், தியேட்டர்கள் திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணிக்கே பல திரையரங்குகளில் விஸ்வாசம் வெளியிடப்பட்டது. ரஜினியின் பேட்ட அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் நாள் விஸ்வாசத்திற்கு மிக அதிக திரைகள் கிடைத்தது. நேற்று ஒரே நாள் வசூலில் விஸ்வாசம் 25 கோடி முதல் 30 கோடிக்குள் வசூல் செய்திருக்கலாம் என்றும். ரஜினியின் பேட்ட 18கோடி முதல் 20 கோடிக்குள் வசூலித்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதிப்பீடு தமிழ்நாட்டிற்கு மட்டும் என்பது குறிப்பிட தக்கது. மற்ற மாநிலங்களையும் சேர்த்து ஒப்பிட்டு பார்த்தால் பேட்ட விஸ்வாசத்தை முந்தியிருக்கும் என்கின்றனர்.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் திரைப்படம் ஒரே நாளில் 25 கோடி உள் வசூல் செய்ததாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.