Skip to main content

"இந்தப் படம்தான் ஒரே நாளில் 60 கோடி வசூல் செய்யப் போகிறது" - தயாரிப்பாளர் தனஞ்செயன்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

"This film is going to collect 60 crores" - Producer Dhananjeyan

 

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் திரைப்படமான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. ஒரே நாளில் வெளியாகும் இந்தப் படத்தின் வியாபாரம் எப்படி இருக்கும்? எத்தனை திரையரங்கில் வெளியாகும்? போன்ற கேள்விகளை தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக கேட்டோம்; அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டிலும் விஜய் - அஜித் என்ற இரு பெரிய நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதே சமயத்தில் தெலுங்கில் பாலையாவின் படமும் சிரஞ்சீவி படமும் வெளியாகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் அளவிற்கான பரபரப்பு ஆந்திராவில் இல்லை. 

 

இங்கேதான் பல ஊடகங்களுக்கு இது முக்கியச் செய்தியாக உள்ளது. வாரிசுக்கு நிறைய தியேட்டர் கிடைக்குமா? துணிவுக்கு கிடைக்குமா? ரெட் ஜெயிண்ட் ரிலீஸ் பண்றாங்களாம் என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியையும் பரபரப்பாக்குவது ஊடகங்கள்தான். அந்த பரபரப்பு இப்போது ஆடியன்சிடம் தொற்றிக் கொண்டது. புக்கிங் ஆரம்பிச்சாலே உடனே புக் பண்ணத் தயாராக இருக்கிறார்கள். 

 

இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிசில் பெரிய ஓப்பனிங்காக இருக்கும். இதற்கு முன்பு வீரம் - ஜில்லா என்றிருந்தது; அதற்கு பிறகு பேட்டை - விஸ்வாசம் என்றிருந்தது; இப்போது துணிவு - வாரிசு என்றிருக்கிறது; இந்த இரண்டு படங்களுமே முதல் நாளே அறுபது கோடி ரூபாய் வசூல் செய்யப்போகிறது. ஆனால், அது எவ்வளவுன்னு பிரிச்சு சொல்லுங்கன்னு கேட்டால் எனக்கு தெரியாது; அது அந்தந்த ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணிவு பட நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
thunivu movie actor Rituraj Singh passed away

சின்னத்திரையில் பல்வேறு இந்து தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிதுராஜ் சிங். தொடர்கள் மட்டுமல்லாது சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் வயிற்றில் சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (20.02.2024) நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 59. ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. 

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

அதிகாலை காட்சி விவகாரம் - தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

rohini theatre varisu thunivu morning shoe issue update

 

கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் வெளியானது. இத்திரைப்படம் சென்னை ரோகிணி திரையரங்கில் கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை காட்சி திரையிடப்பட்டதாகக் கூறி 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் சென்னை மாநகரக் காவல் ஆணையர். 

 

இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி திரையரங்கு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளை 24 மணி நேரமும் திரையிட முடியும் என்கிற அடிப்படையிலேயே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில், கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் சினிமா காட்சிகளைத் திரையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இரு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்  ரோகிணி திரையரங்கு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.