Skip to main content

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

The film crew has released the new update of Vijay Antony movie

 

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிற படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது. 

 

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓட்டு தான் நம் வலிமையான ஆயுதம்” - விஜய் ஆண்டனி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
vijay antony about election 2024

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது. 

இதனால் படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி குறித்த ஆலோசனையும், ரோமியோ படம் தொடர்பாகவும் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, தேர்தல் குறித்தான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “எல்லாரும் ஓட்டு போடுங்க. ஓட்டு போடாம இருக்காதீங்க. நோட்டாவிற்கு போடாதீங்க. பெஸ்ட்-னு யாராவது இருப்பது போல வேஸ்ட்-னும் யாராவது இருப்பாங்க. அதில் யாராவையாவது தேர்ந்தெடுங்க. ஓட்டை வீணடித்து விடாதீங்க. ஓட்டு தான் நம் கைகளில் இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். அதை மிஸ் பண்ணிட்டு குறை சொல்லக் கூடாது.

ஓட்டு போடுவதற்கு முன்னாடி யாருக்கு வாக்களிக்க வேண்டும், அவர் என்ன பண்ணார் என யோசித்து ஓட்டு போடுங்கள். அரை மணி நேரமாவது யோசியுங்கள். பாதி பேர் நேரா போய் குத்திட்டு வந்துடுறாங்க. பிடித்தவங்களுக்கு ஓட்டு போடுறாங்க. அப்பாவாக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும், நாட்டுக்கு என்ன பண்ணாங்க, நல்லது பண்ண அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு என யோசிங்க” என்றார். 

Next Story

மனைவி மீது ஒரு தலைக் காதல் - விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Vijay Antony Mirnalini Ravi Romeo trailer released

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது, விஜய் ஆண்டனியிடம், படத்தின் போஸ்டரில் கதாநாயகியின் கையில் மது இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ரொம்ப நாளாகவே குடி என்பது நம்ம ஊரில் இருக்கிறது. முன்பு சாராயம், திராட்சை ரசம் என்ற பெயரில் குடிச்சிட்டு இருந்தோம். இப்போ பார்களில் குடிக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே ஜீசஸ் கூட குடிச்சிருக்கார்” என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

பின்பு இது தொடர்பாக விளக்கமளித்த விஜய் ஆண்டனி, “நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி  இருவருக்கும் கல்யாணம் நடந்த பிறகு மிருணாளினி ரவியை ஒரு தலையாக காதலிக்க முடிவெடுக்கிறார் விஜய் ஆண்டனி. அதற்காக என்ன திட்டம் தீட்டுகிறார், அவரது முடிவு நிறைவேறியதா? என்பதை விரிவாக காமெடி கலந்த ஒரு காதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.