Advertisment

‘எம்புரான்’ படத்தை கண்டித்து விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

farmers association protest against empuraan movie

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாளில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

Advertisment

இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி ஆதரவாளர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சர்ச்சை ஆன நிலையில் படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு மோகன்லால் இந்த சர்ச்சை தொடர்பாக படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், “நாட்டின் மிக மோசமான இன அழிப்பு சம்பவத்தை படத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளதால், அது இதுபோன்று திட்டமிடும் சங் பரிவார் கும்பலை கோபமடையச் செய்துள்ளது. இதனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பகிரங்கமாக படக்குழுவினருக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய படம் என்ற ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்த அச்சுறுத்தும் சூழல் கவலையளிக்கிறது” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் இப்படத்திற்கு பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பிரித்விராஜ் தொடர்ந்து முல்லை பெரியாறு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளனர். இதனால் அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Farmer mohanlal prithviraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe