பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்ற வனிதா ஏற்படுத்திய குழப்பத்தால் மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் வனிதா மேல் கடும் கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் அவர் எப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என ஆவலாக காத்திருக்கின்றனர்.

vanitha

Advertisment

Advertisment

இதற்கிடையே வனிதா ரி என்ட்ரி கொடுத்த பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இதனால் அவரை தொடர்ந்து போட்டியாளராகவே வைத்திருக்க பிக்பாஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த நாமினேஷனில் 'வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே வந்த வனிதா பெயரை இந்த வாரம் எவிக்சனுக்கு சேர்க்கக்கூடாது' என பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் இப்படி அறிவித்துள்ளது வனிதா உள்ளேயே தங்கவைக்கப்படுவதை உறுதிசெய்யும்படி உள்ளதால் ரசிகர்கள் மீண்டும் கடும் கோபத்திலும், கலக்கத்திலும் உள்ளனர். மேலும் வனிதாவிற்கும், பிக்பாஸிற்கும் எதிராக கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.