கடந்த 2018ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இந்த படத்திலுள்ள ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாள் முதலே பல மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டுசாதனை படைத்தது.இந்த பாடல் யூ-ட்யூபில் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது 100 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இந்திய திரைப்படங்களில் பஞ்சாப் மொழி பாடல் ஒன்றுதான், முதன்முதலில்100 கோடி பேர் பார்த்து ரசித்தனர். அதன்பின் ஒன்றிரண்டுஇந்தி பாடல்கள், இந்த சாதனையைபடைத்துள்ளது.
ரௌடி பேபிபாடல், 100 கோடிபார்வையாளர்களை கடந்ததன் மூலம், அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்தியபாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனைதொடர்ந்து ரௌடிபேபிபாடல், 100 கோடிபார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, படத்தின்தயாரிப்பு நிறுவனமானவுண்டர்பார், 'காமன்டிபி' ஒன்றைவெளியிட்டது.
வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டகாமன்டிபியில், தனுஷின்புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தரசிகர்கள், காமன்டிபியில்சாய்பல்லவி எங்கே?என, சமூகவலைதளங்களில்கேள்விஎழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள், ரௌடிபேபிபாடலின் இச்சாதனைக்கு, சாய் பல்லவியின் சிறப்பானநடனமும்ஒரு காரணம். எனவே, அவருடைய புகைப்படமும்,காமன்டிபியில்கண்டிப்பாகஇடம் பெற்றிருக்கவேண்டும் எனகருத்துகளைபதிவிட்டு, கண்டனம்தெரிவித்து வருகின்றனர்.