Skip to main content

ரூ.75-க்கே நடக்கல, ரூ.99க்கு நடக்குமா? - புலம்பும் ரசிகர்கள்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

fans about national cinema day 2023

 

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, இந்தாண்டு தேசிய சினிமா தினமாக வருகிற அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும். இந்த முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தது. 

 

இதையடுத்து மும்பை, டெல்லி, பெங்களூரு, சண்டிகர், புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில், அன்றைய நாளில் 75 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் கட்டண குறைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் உறுப்பினர்களாக இல்லை என்றும் விளக்கமளித்தனர். இது தமிழ் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டால், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பலருக்கும் அது வசூலைப் பாதிக்கும் என கூறினர். 

 

இந்த நிலையில் இந்தாண்டும் வருகிற அக்டோபர் 13ஆம் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என அறிவித்து டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என சொல்லியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அது கொண்டாடப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மேலும் தமிழ் ரசிகர்கள் சிலர், கடந்த முறை தமிழ்நாட்டில் மட்டும் நடக்காதது குறித்து புலம்பி வருகின்றனர். அதில் ஒருவர், ரூ.75-க்கே நடக்கல, ரூ.99க்கு நடக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் வெளியாகும் படங்கள் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டில் ரூ.75 டிக்கெட் கட்டணம் குறைப்பு? - திரையரங்க உரிமையாளர்கள் விளக்கம்

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

national cinema day Rs.75 ticket fare reduction in Tamil Nadu Theater owners explained

 

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் வருகிற 23ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றனர் என்றும் அறிவித்தனர்.

 

நாடு முழுவதும் இன்று(23.09.2022) தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்த குறைந்த கட்டண சலுகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சண்டிகர், புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் 75 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கட்டண குறைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் உறுப்பினர்களாக இல்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.   

 

இன்று தமிழ்நாட்டில் அதர்வாவின் 'ட்ரிக்கர்', வைபவ் நடிப்பில் ‘பபூன்’ உள்ளிட்ட சில படங்கள் வெளியாகியுள்ளன. அதோடு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'அவதார்' படமும் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

திரையரங்க வசூல் பாதிப்பு...“தேசிய சினிமா தினம்” தேதி மாற்றம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

National Cinema Day has been changed from September 16 to 23!

 

தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 23- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

மல்டிபிளஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அந்த நாளில் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவெல், ஏசியன், மூவிடைம் உள்ளிட்ட குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 4,000 மல்டிபிளஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய் ஆக விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

ரசிகர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பலரும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டால், அது வசூலைப் பாதிக்கும் என கூறினர். வரும் செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண்விஜய்யின் சினம் உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாக உள்ளன. 

 

மேலும், கடந்த வாரம் ரன்வீர் கப்பூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா இந்தி படமும் வட இந்தியாவில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. அதனால்  தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 23- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என கருதப்படுகிறது.