மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அஞ்சு குரியன், தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு ஜூலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் அஞ்சு குரியன் கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதன்படி அஞ்சு குரியனுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு ரசிகர், அவரின் காலில் விழுந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அஞ்சு குரியன் அவரை தூக்கி விட அவர் எழுந்து நின்றார். பின்பு அஞ்சு குரியனை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
???????#Anjukurianpic.twitter.com/KlhKYFfDTL
— S R E E | ಶ್ರೀ ✨ (@SreeDharaNEL) August 24, 2024