Skip to main content

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தமிழ் நடிகரின் மகன் கைது...

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

தூரல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சூர்ய பிரகாஷ். இவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தந்தையாக நடித்து தற்போதைய காலகட்ட இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரது மகன் விஜய் ஹரிஷ், நாங்களும் நல்லவங்கதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 25ஆகிறது.
 

surya prakash

 

 

இவர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதன்பின் கடந்த ஜனவரி மாதம் விருகம்பாக்கத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் விஜய் ஹரிஷ்.

மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாக மிரட்டி பலமுறை அந்த மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்