தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான பாடகரான யேசுதாஸ். இவரின் இளைய சகோதரர் ஜஸ்டின் மர்மான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஜஸ்டினுக்கு வயது 62, காக்காநாடு என்னும் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த நான்காம் தேதி இரவு காணாமல் போனார். இதனையடுத்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொச்சி நகரின் வல்லார்படம் பகுதியிலுள்ள பேக்வாட்டர் ஓரத்தில் ஜஸ்டினின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முலவுகாடு காவல் நிலைய அதிகாரி சுனு, ஜஸ்டினுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்ககலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவரது மகன் இறந்தபின் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். அதனால் கூட அவர் தற்கொலை செய்திருக்கலாமோ என்று சொல்லப்படுகிறது.
எனினும், அவர் உயிரிழந்தது பற்றிய உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.