பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் லீக்காகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் கதை கசிந்தது என்று பல கதைகள் சமூக வலைதளத்தில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் பேராசிரியராக நடிக்கும் விஜய், நாற்பது வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதவராக நடிப்பதாக படத்தில் பணிபுரியும் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. பேராசிரியராக அதுவும் பேச்சுலராக இருக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுவரை பார்த்திராத வகையில் ஒரு கிளாஸ் மற்றும் மாஸ் கலந்த விஜய்யாக இப்படத்தில் இருப்பார் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முன்னமே நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.