Skip to main content

"ரோட்டுல நிர்வாண போராட்டம் பண்ணனும்" நிர்மலா கொற்றவை சிறப்பு பேட்டி (வீடியோ)

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் ஒரு அவதார புருஷன்; அவரை இப்படி சொல்லலாமா? - பொள்ளாச்சி ஜெயராமன் வருத்தம் 

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

pollachi jeyaraman talk about ramar issue th assembly

 

2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் நான்காவது நாளான இன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் குறித்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட காலக் கனவாக இருப்பது சேது சமுத்திரத் திட்டம். அதனை ராமர் பாலம் என்று சொல்லி மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்று முயல்கிறது. கட்டுக்கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது” எனப் பேசினார். 

 

இந்நிலையில் இது குறித்துப் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், "100 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகிற ஒரு மதத்தின் நாயகன் ராமர். ஒரு நாளைக்கு பல முறை ராம ராமா என்று சொல்லுகிறோம். அப்படிப்பட்ட ராமரை கற்பனை கதாபாத்திரம் என்றும் கற்பனைக் கதைகள் என்றும் எப்படிச் சொல்வது. ராமர் ஒரு அவதார புருஷன். அவரைக் கதாபாத்திரம் என்று அவையில் பதிவு செய்தது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

''ஏங்க அதிமுக என்றால் நாங்கதாங்க''- டென்ஷன் ஆன ஜெயக்குமார் 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

"If you long for AIADMK, we will bear it" - a tense Jayakumar

 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (01/08/2022) காலை 11.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

அந்த வகையில், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோவை செல்வராஜ் கலந்துகொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், ''அதிமுகவின் சார்பில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நாங்கள் இரண்டு பேரும்தான் கலந்துகொண்டோம். எனவே வேறு யாரோ கலந்துகொண்டது பற்றி எங்களிடம் கேட்காதீர்கள். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் எனத் தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள் என டென்ஷன் ஆனார். அப்பொழுது, கோவை செல்வராஜ் அதிமுக இடத்தில் உக்கார்த்திருந்தாரே எனத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, 'ஏங்க அதிமுக என்றால் நாங்கதாங்க' என்றார்.

 

விடாத செய்தியாளர்கள் 'இன்றைக்குத் தேர்தல் ஆணையத்தில் வந்ததுபோல் நாளை சட்டமன்றத்தில் நாங்கள்தான் அதிமுக என்று அவர்கள் வந்து உட்கார்ந்தால்? எனக் கேள்வி எழுப்ப, ஏங்க யாராவது ஏதாவது சொல்லிட்டுப்போறாங்க அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க'' என்றார்.