'எதற்கும் துணிந்தவன்' படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு 

etharkkum thunindhavan new update out now

ஜெய் பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="345d97e1-4a14-4423-9563-f07c25a68f5b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_51.jpg" />

சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்நிறைவடைந்தாகஅறிவித்திருந்தார்.இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (19.11.2021) மதியம் 12 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

actor surya Etharkkum Thunindhavan priyanka mohan sun pictures.
இதையும் படியுங்கள்
Subscribe