Advertisment

முருகன் அவதாரம் எடுத்த சூர்யா... கவனம் ஈர்க்கும் 'உள்ளம் உருகுதய்யா' பாடல்!

Etharkkum Thunindhavan movie Ullam Urugudhaiya song released

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியான வாடா தம்பி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடலைபடக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்ளம் உருகுதய்யா என தொடங்கும் இப்பாடலை பிரதீப் குமார் வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன்ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நடிகர் சூர்யா முருகன் வேடத்தில் நடித்துள்ள இப்பாடல் அனைவரின் கவனத்தையும்ஈர்த்துவருகிறது.

Advertisment

actor surya Etharkkum Thunindhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe