Skip to main content

இனிமேல் என் வழில யாராவது வந்தா! கொதித்தெழுந்த தனுஷ் ENPT trailer

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

கடந்த 2016ஆம் ஆண்டே கவுதம் மேனன் தனுஷை வைத்து  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்றொரு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார். விரைவில் படம் வெளியாகிவிடும் என்று பார்த்தால், அப்படியே இந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு துருவ நட்சத்திரம் படத்தை எடுக்க தொடங்கினார் கவுதம். இதன் மீண்டும் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திலிருந்து மருவார்த்தை பேசாதே என்றொரு பாடலை வெளியிடப்பட்டது. இந்த பாடலின் இசையமைப்பாளர் என்று தெரியாமலேயே வெளியிடப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய புரோமோஷனாக இருந்தது.
 

dhanush

 

 

2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவரை ஷூட்டிங்கும் நீடித்துக்கொண்டே இருக்க, படத்திற்கு வேறு பல தடைகள் வர தொடங்கின. தீபாவளிக்கும் ரிலீஸாகாமல் இருந்த படம், 2019ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. இதுபோல ரிலீஸ் தேதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டு படம் வெளியாகமலேயே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

 
அண்மையில் தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக இப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது அதனுடன் அதில் செப்டம்பர் 6ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து, தற்போது மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார். 

Next Story

நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Actor Dhanush's son fined

 

பிரபல நடிகர் தனுஷின் மகன் வாகன விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

 

பிரபல நடிகர் தனுஷின் மூத்த மகன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தனுஷின் மூத்த மகன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தனுஷின் மூத்த மகன் 17 வயது சிறுவன் என்ற நிலையில், சிறுவனாக இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.