Skip to main content

"இது குரலற்றவர்களின் குரல்" - துரை வைகோவை நெகிழவைத்த சீனு ராமசாமி

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Durai Vaiko written letter to Seenu Ramasamy about Idam Porul Eval film

 

இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான, எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ‘இடம் பொருள்  ஏவல்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  இந்தப் படத்தை ஒரு திரைக்காவியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா, கிராமியம் மணக்க மணக்க, இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பிரபலங்கள் பலரும் மனமுவந்து படத்தைப் பாராட்டி வருகின்றனர். 

 

Durai Vaiko written letter to Seenu Ramasamy about Idam Porul Eval film

 

அந்த வகையில் ம.தி.மு.க. தலமைக்கழகச் செயலாளரான துரை.வைகோ, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் சீனு ராமசாமிக்கு மனமுருக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

 

அந்தக் கடிதத்தில்... “திரைப்பட இயக்குநர் நண்பர் திரு. சீனு ராமசாமி அவர்கள் அழைப்பின் பேரில் இன்று ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் கண்டேன். கவிப்பேரரசு வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் திரு கே. பாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Durai Vaiko written letter to Seenu Ramasamy about Idam Porul Eval film

 

விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படத்தை லிங்குசாமி அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயற்கை வளங்களையும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஆங்காங்கே இப்படம் சுட்டிக்காட்டுகிறது. கல்லுக்குள் ஈரம் உண்டு என்று சொல்வார்கள், கல்நெஞ்சமும் கரையும் என்று சொல்வார்கள், கொலை செய்யும் கொலைகாரனுக்கும் ஒரு இதயம் உண்டு என்று சொல்கிறது இந்த படம்.

 

ஏழை எளியோர் குரலற்றவர்களின் வாழ்க்கையை வஞ்சிக்கும் உலகத்தையும் அந்த எளியோர்கள் படும் துயரத்தையும் இந்த படம் எடுத்து காட்டுகின்றது. அன்பு மனங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு படைப்பு. நண்பர் சீனு ராமசாமி அவர்களின் மற்றுமொரு அருமையான படைப்பு.” என்று பாராட்டியிருக்கிறார்.

 

- இலக்கியன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.