Skip to main content

மீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

theatre

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து உலகம் முழுவதும் ஐம்பது லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
 


கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்களான ஷாப்பிங் மால், திரையரங்கம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற இடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமலே இருக்கிறது.

மூன்று மாதங்களாக திரைத்துறையிலும் எந்தவித ஷூட்டிங்கையும் நடத்த அனுமதி இல்லாமல் தற்போதுதான் சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களின் இறுதிக்கட்ட பணிகளைத் தொடர தமிழ அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

 


இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. அந்த வகையில் துபாயில் நேற்று முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. துபாயில் தமிழர்கள் மற்றும் மலையாள மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதால் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர். திரையரங்கில் சமூக இடைவெளி, முகத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வருவது போன்ற பல நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓடிடி வெளியீடு கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்” - திருப்பூர் சுப்ரமணியம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
tiruppur subramaniyan latest press meet

திரையரங்குகள் தொடர்பாகத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இதன் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரண்டு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகும் கால அவகாசத்தை 8 வாரங்களாக அதிகரிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசவுள்ளோம். 8% லோக்கல் வரி விதிப்பிற்கு தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை வைக்கவுள்ளோம். பராமரிப்பு வசதிகளுக்கு ஏசி திரையரங்கத்திற்கு ரூ.10, ஏசி அல்லாத திரையரங்கிற்கு 5 ரூபாய்க்கும் செய்து கொடுக்க அரசாங்கத்திடம் கேட்கவுள்ளோம்.

முன்னதாக படம் ரிலீஸாகும் சமயத்தில் பட விநியோகம் செய்யும் நிறுவனத்திடமிருந்து அனைத்து திரையரங்கிற்கும் ஆட்கள் வருவார்கள். ஆனால் இப்போது ஃபோனில் மட்டுமே தொடர்பு கொண்டு வசூல் விவரங்களை கேட்கின்றனர். அந்த ஆட்களுக்கு பேட்டா கொடுக்க வேண்டிய முறை இருந்து கொண்டு வருகிறது. அதை ரத்து செய்ய தயாரிப்பாளர்களிடத்தில் கேட்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தவுள்ளோம்.

தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் பங்கு தொகையான 80 சதவீதத்தை குறைத்து அதிகபட்சம் 60 சதவீதம் கொடுக்க முடிவெடுத்துள்ளோம். திரையரங்கில் நிகழ்ச்சி, திருமணம், விளையாட்டு உள்ளிட்டவை ஒளிபரப்ப கோரிக்கை வைக்கவுள்ளோம்” என்றார்.  

Next Story

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார் சினேகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.