இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில்உள்ள முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்தவகையில்நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் எனவும்கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022