Skip to main content

டப்பிங் யூனியன் தேர்தல்; மீண்டும் தலைவரான சீனியர் நடிகர் !

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Dubbing Union Election - Senior Actor radharavi as President again

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 23 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

ராதாரவி காலில் அடிப்பட்டுள்ளதால், தனது கைத்தடியுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவியாக வந்திருந்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.  

 

Dubbing Union Election - Senior Actor radharavi as President again

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.  மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ராதாரவி 662 வாக்குகள் பெற்று தனது எதிராக போட்டியிட்ட ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரை விட 313 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

இதனிடையே 2024-2026-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16ஆம் தேதி நடந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பேரரசு, பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவராக அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச் செயலாளராக சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட பழனியில் உள்ள சங்கத்தில் நேற்று பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த குரலெல்லாம் இவரின் குரல்தானா? - வியக்க வைக்கிறார் டப்பிங் கலைஞர் லக்‌ஷனா ராஜீவ்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Lakshana Rajeev  Interview

 

பல படங்களில் தன்னுடைய குரலின் மூலம் நம்முடைய மனதில் ஆழமாகப் பதிந்த டப்பிங் கலைஞர் லக்‌ஷனா ராஜீவ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

 

குஷி படத்தில் விஜய் சாருக்கும் ஜோதிகா மேடமுக்கும் அவர்களுடைய குழந்தை வயது அழுகுரலாக வருவது என்னுடைய குரல்தான். அம்மா, குஷி படத்தின் டப்பிங்குக்கு சென்றபோது குழந்தையான என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது நான் அழுதபோது என்னுடைய குரலைப் பதிவு செய்து படத்தில் பயன்படுத்தினர். சிறுவயதில் இருந்தே அம்மாவுடன் பயணித்ததால் எனக்கும் டப்பிங் மீது ஆர்வம் வந்தது. முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அம்மாவின் அறிவுரைக்கிணங்க நல்ல பயிற்சி பெற்று டப்பிங் துறையில் நுழைந்தேன். 

 

செக்கச் சிவந்த வானம் படத்தில் முதன்முதலில் கூட்டத்துக்கு டப்பிங் பேசினேன். ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறேன். பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்தேன். '96' படத்தில் சிறுவயது த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம். சுந்தரி சீரியலுக்கு டப்பிங் கொடுத்தது சவாலான அனுபவமாக இருந்தது. கிராமத்து ஸ்டைலில் அந்த சீரியலில் நான் டப்பிங் பேசுவதற்கு அதன் குழு எனக்கு மிகவும் உதவியது. விசுவாசம் படத்தில் வில்லனுடைய மகளுக்கு டப்பிங் கொடுத்தேன். சிவா சார் மிகவும் சப்போர்டிவாக இருந்தார். 

 

கார்ட்டூன்களில் குரலை மாற்றிப் பேச வேண்டிய தேவை ஏற்படும். விரும்பி செய்வதால் இவை அனைத்துமே எனக்குப் பிடித்தவை தான். நெட்பிலிக்ஸ்  சீரிஸ் ஒன்றிலும் டப்பிங் செய்துள்ளேன். ஒரு பெரிய படத்திலும் டப்பிங் பேசியிருக்கிறேன். அது குறித்த தகவலை விரைவில் தெரிவிக்கிறேன்.

 

 

Next Story

சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

cinema dubbing union office issue

 

சென்னை சாலி கிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக சினிமா டப்பிங் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடடத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ராதாரவி 45 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த கட்டிடத்தை விதிகளை மீறி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை ராதாரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதிலளிக்காமல் ராதாரவி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 


 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.