Skip to main content

"நான் நடிக்கிறேனா...." - சத்யராஜ் மகள் ஷாக்

Published on 12/02/2018 | Edited on 13/02/2018
divya


கட்டப்பா புகழ் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் பிரபல தனியார் மருத்துவமனையில் ஊட்டச்சத்து மருத்துவராக  பணிபுரிந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இது குறித்து பேசிய திவ்யா சத்யராஜ்..."தற்போது பரவி வரும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை மேலும் சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை” - திவ்யா சத்யராஜ்

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

"I have no intention of apologizing" - Divya Sathyaraj


சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.



சில வருடங்களுக்குமுன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன் வைத்த கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.”

 

“ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

 

 

 

Next Story

மருந்து வாங்க செல்கிறீர்களா...? -திவ்யா சத்யராஜ் வேண்டுகோள்

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
Do you buy medicine at the medical store? - Divya Satyaraj Request



நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணராகத் திகழ்கிறார். இவர், உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான 'அக்ஷயபாத்ரா' திட்டத்தின் தூதராகவும் செயலாற்றுகிறார். 'வேர்ல்டு விஷன்' (World vision) என்ற அமைப்புடன் இணைந்து கிராமப்புற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சத்தான ஊட்டச்சத்து கிடைக்க வகை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது, கரோனா ஊரடங்கு சமயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்கிறார். திவ்யா சத்யராஜ் நம் வழியாக மக்களுக்கு தெரிவிப்பது...


"லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீம், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.

 

 


மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்".

ஏற்கனவே மருத்துவ துறையின் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு திவ்யா சத்யராஜ் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.