Skip to main content

“எப்போது ஷூட்டிங், படங்களின் ரிலீஸ்...”- டிஸ்னி நிறுவனம்

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
dis


கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல தொழில்துறைகள் முடங்கியுள்ளது. குறிப்பாக சினிமாத்துறை கடந்த மூன்று மாதங்களாகவே முடங்கியுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் படங்களின் வெளியீடு, போஸ்ட் புரொடக்‌ஷன் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி மற்றும் மார்வல் திரைப்படங்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் எப்போது டிஸ்னி படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது பற்றி பேசியுள்ள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாப் சபெக், "ஆரம்பிக்கும் போது முகக் கவசம் கொடுத்துப் பொறுப்பாக ஆரம்பிப்போம். ஆனால் இப்போதைக்கு ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை. பிரம்மாண்ட திரைப்படங்களைப் பொருத்த வரை எங்கள் தீம் பார்க்குகளில் பின்பற்று வழிமுறைகளையே பின்பற்றுவோம்.

தயாரிப்பு வேலைகளில் ஈடுபடவுள்ள எங்கள் பணியாளர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். பொது சுகாதார அதிகாரிகள் சொல்லும் வரை, கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தும் வரை படப்பிடிப்பு தொடங்காது.

 

 


பிரம்மாண்டமான படங்களைத் திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தின் மதிப்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். 2019 ஆம் ஆண்டு எங்களின் 7 படங்கள் 1 பில்லியன் டாலர் வசூலைக் கடந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ரசிகர்கள் படம் பார்க்கும் முறை மாறி, வளர்ந்து வருவதாலோ அல்லது கோவிட் நெருக்கடி போன்ற சூழல்களாலோ, எங்கள் ஒட்டுமொத்த திட்டத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு நிலையை ஆராய்வோம்" என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் ஃபேவரெட் படத்திற்கு 14 நாடுகளில் தடை

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Children's favorite film banned in 14 countries

 

ஹாலிவுட் திரையுலகில், அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் மவுசு அதிகம். அந்த வகையில் 1995-ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'டாய் ஸ்டோரி' அனிமேஷன் படம் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து 'டாய் ஸ்டோரி' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. கடைசியாக இப்படத்தின் நான்காம் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. 

 

இதனிடையே 'டாய் ஸ்டோரி' படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ள 'லைட் இயர்' படம் நேற்று (17.06.2022) வெளியானது. இப்படத்தை அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ளார்.   

 

இந்நிலையில் 'லைட் இயர்' படத்திற்கு துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என கூறியும் 'லைட் இயர்' படத்திற்கு தடை விதித்துள்ளது.   

 

 

Next Story

ஐபிஎல் தொடர்: மும்மடங்கு தொகையை எதிர்பார்க்கும் பிசிசிஐ; முட்டி மோதவுள்ள  டிஸ்னி -சோனி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

ipl

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலம், மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் 2023 முதல் 2027 வரைக்குமான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, 40 முதல் 45 ஆயிரம் கோடி வரை ஏலம் போகலாம் என பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் நெட்வொர்க் 16, 347 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

 

ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற சோனி, டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், ரிலையன்ஸ்-வயாகாம் 18, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் காத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் கடந்தமுறையை விட மும்மடங்கு தொகையை பிசிசிஐ எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய தயங்கமாட்டோம் என டிஸ்னி கூறியுள்ள நிலையில், சோனி நிறுவனமும் இந்த ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இரு நிறுவனங்களுக்குமிடையே ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.