Skip to main content

தல - தளபதி... இருவரையும் டீல் செய்த இயக்குனர்கள்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020


 

ajith vijay


தமிழ்ச் சமூக ஊடகத்தில் நிலவும் பல விஷயங்கள் திடீரென ட்ரெண்டிங் ஆகும், பின் தானே அடங்கும். பல விவாதங்கள் புயலாய் எழும், பின் ஓயும். ஆனால், எப்போதும் ஓயாத பிரச்னை என்றால் விஜய், அஜித் ரைவல்ரிதான்.

 

விஜய், அஜித் இருவருக்கும் தனித்தனியே நெருக்கமான, ஃபேவரிட் இயக்குனர்கள் என்று சிவா, விஷ்னுவர்தன், அட்லீ போன்ற சிலர் இருக்கின்றனர். அதே நேரம் விஜய், அஜித் இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர்களும் இருக்கின்றனர்.

 

வசந்த் 



1995ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ’ஆசை’ என்றொரு படத்தை இயக்கினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யாவை வைத்து ’நேருக்கு நேர்’ என்றொரு படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலம்தான் சூர்யா சினிமாவிற்கு அறிமுகமாகினார். முதலில் இந்தப் படத்தில் அஜித்தான் நடிப்பதாக இருந்தது. ஒருவேளை அது நடந்திருந்தால், இருவரும் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அது இருந்திருக்கும். எப்படியோ வசந்த் அஜித், விஜய்யை வைத்த இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படங்கள்தான்.

 

விக்ரமன்

 

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ’பூவே உனக்காக’ என்னும் படத்தின் மூலம் முதல் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் விக்ரமன். இவரது இயக்கத்தில் அஜித் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோ ரோலாக இல்லாமல் கெஸ்ட் அப்யரன்ஸ் கொடுத்தார் அஜித்.

 

எஸ்.ஜே. சூர்யா

 

அஜித்திற்கு ஒரு டபுள் டமாக்கா வெற்றி என்றுதான் 'வாலி' படத்தின் வெற்றியைச் சொல்ல வேண்டும். ஆமாம், அஜித் இரு வேடங்களில், அதுவும் ஹீரோவும் அவரே வில்லனும் அவரே என்று முதல் முயற்சியில் வெற்றியைத் தழுவினார். அதற்கு வித்திட்டவர் எஸ்.ஜே. சூர்யாதான். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமே விஜய்யை கமிட் செய்து 'குஷி' என்னும் படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. இதுவும் வேற லெவல் வெற்றிதான்.

 

ஏ.ஆர். முருகதாஸ்

 

அஜித்தை வைத்து 'தீனா' படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுதான் முருகதாஸுக்கு முதல் படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' என்று மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சர்காரை தவிர மற்ற இரண்டும் பிளாக்பஸ்டர் வெற்றி.

 

எழில் 

 

விஜய்யை வைத்து தன்னுடைய முதல் படமான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தை இயக்கினார். இது பெரிய வெற்றி பெற்றது. அஜித்தை வைத்து ’பூவெல்லாம் உன் வாசம்’, ’ராஜா’ என்று இரண்டு படங்களை இயக்கினார். இதில் ’பூவெல்லாம் உன் வாசம்’ படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

 

கே.எஸ். ரவிக்குமார்

 

விஜய்யை வைத்து ’மின்சாரக்கண்ணா’ என்றொரு படத்தை இயக்கினர் கே.எஸ்.ரவிக்குமார். ’படையப்பா’ மாபெரும் வெற்றி, விஜய்க்கும் அப்போது தொடர் வெற்றி என்பதால் ’மின்சாரக்கண்ணா’ படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி தோல்வியடைந்தது. ’வில்லன்’, ’வரலாறு’ என்று இரண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார். இதில் வில்லன் படம் வெற்றி, வரலாறு படம் பல தடைகளுக்குப் பின்னர் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

 

rajavin parvaiyile

 

 

பேரரசு

 

விஜய்யை வைத்து ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என்று இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர் பேரரசு. இதனையடுத்து ’திருப்பதி’ என்று படத்தை அஜித்தை வைத்து இயக்கினார். இந்த படம் நூறு நாட்கள் ஓடினாலும் விஜய்க்கு அவர் கொடுத்த வெற்றியை போல் வரவில்லை.

 

ஏ.எல்.விஜய்

 

அஜித்தை வைத்து ’கிரீடம்’ என்னும் படத்தை இயக்கினார் ஏ.எல்.விஜய். இதுதான் இவருடைய முதல் படம். மோகன்லால் நடிப்பில் ’கிரீடம்’ என்று மலையாளத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான ’கிரீடம்’ வெற்றிபெறவில்லை. அதைப் போல விஜய்யை வைத்து இயக்கிய ’தலைவா’ பல தடைகளுக்குப் பின்னர் வெளியானது. ஆனால், இதுவும் எதிர்பார்த்ததுபோன்று ஓடவில்லை.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள்தான் விஜய், அஜித் இருவரையும் இயக்கியவர்கள். இவர்கள் அனைவரையும் விடச் சிறப்பைப் பெற்றவர் ஜானகி சௌந்தர். விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்கியவர். ‘ராஜாவின் பார்வையிலே’தான் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம். இப்படம் வெற்றி பெறவில்லை.

 

முன்பெல்லாம் விஜய், அஜித் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்குவதுபோல பஞ்ச் வசங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அதே காலகட்டத்தில் இவர்கள் விஜய் அஜித்தை வைத்து படங்கள் இயக்கியிருந்தாலும் இவர்களது படங்களில் பெரும்பாலும் ரைவல்ரி வசனங்கள் இருக்காது. இந்த இயக்குனர்களைப் போல தற்போது விஜய், அஜித் இருவரில் ஒருவரது ஃபேவரிட் இயக்குனராக இருப்பவர்கள் மற்றவரை வைத்துப் படம் இயக்குவார்களா என்பதையும் அப்படி இயக்கினால் படம் எப்படி இருக்கும் என்பதையும் காண ஆவலாகத்தான் இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.