Skip to main content

பைனான்சியர் அன்புச்செழியனைப் பற்றிப் பேசியதால் என்னை ஒதுக்குகிறார்கள்!

Published on 02/04/2018 | Edited on 03/04/2018
susee


நெஞ்சில் துணிவிருந்தால் படத்தையடுத்து இயக்குனர் சுசீந்திரன் முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கிய ஏஞ்சலினா படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து அவர் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் தன் எதிர்கால திட்டங்களையும், புதிய பட அறிவிப்புகளையும் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சுசீந்திரன். அதில்..."இன்று எனது பிறந்த நாள். இன்று ஹோலி சனிக்கிழமை என்பதால், நாளை (ஏப்ரல் 1) எனது பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளேன். இன்றுவரை நான் யாரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை. அசோக் அண்ணனின் மரணம் குறித்து நான் பேசியதால், அந்த பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பந்து எவ்வளவு வேகமாக தரையில் எறியப்படுகிறதோ, அவ்வளவு வேகமாகப் பந்து மேலே எழும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது முதல் படத்திலேயே முழுவதும் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது தயாரிப்பாளர் என்று அனைத்துப் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன் தான், கடந்த 10 ஆண்டுகளில் (கர்வம் அல்ல). இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன். எனது முதல் படம் ‘ஏஞ்சலினா’, இரண்டாவது படம் ‘ஜீனியஸ்’. இரண்டு படங்களும் நிறைவடைந்துள்ளன. எனது மூன்றாவது படம் ‘சாம்பியன்’, புட்பால் பற்றியது. ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்தப் படத்தைத் தொடங்க உள்ளேன். மற்ற இரண்டு படங்களின் தலைப்புகள், மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன். இந்த வருடம் முழுக்க முழுக்கப் புதுமையான கதைக்களத்துடன் பயணிக்கப் போகிறேன். எனது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சீனாவில் அமோக விலைக்கு விற்ற தமிழ் திரைப்படம் !

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
kennadi club

 

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை கதைதான் ராஜா (Content is King) மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள "கென்னடி கிளப்" படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் படமாக நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது "கென்னடி கிளப்" படம். இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

 

Next Story

சத்தமே இல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன் !

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
suseenthiran

 

 

 

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சுசீந்திரன் இயக்கியுள்ள மற்றொரு படமான 'சாம்பியன்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ, ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.