இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில்இயக்குநர்செல்வராகவன் 'மாநாடு' படத்தை பார்த்து விட்டு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தாமதமாய் 'மாநாடு' படம் பார்த்ததற்குமன்னிக்கவும், ரசித்து பார்த்தேன். சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரின் நடிப்பு அருமை. நண்பர்கள் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இது விட முயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.