Skip to main content

"இந்தப் படம் சொல்ல வரும் கருத்து என்ன?" - சர்ச்சைப்படம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா விளக்கம்

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Ram Gopal Varma

 

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காதல் காதல்தான் திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் கதாநாயகிகள் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களாக நடித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளம்பியுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா இப்படம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

லெஸ்பியனாக இருப்பவர்கள் அது பற்றி வெளியே சொல்வதை அசிங்கமாக நினைக்கிறார்கள். அது மாற வேண்டும் என நினைக்கிறேன். இது ஒரு க்ரைம் ட்ராமா படம். அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இருவரும் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்கள். ஏதாவது ஒரு பின்புலத்தை பிரதிபலிக்கும் வகையான படமாக இல்லாதபோது அதை பான் இந்தியா படம் என்கிறார்கள். ஒரு படத்தால் நம்மை அழ வைக்கமுடியும், ஒரு படத்தால் நம்மை சிரிக்க வைக்க முடியும், ஒரு படத்தால் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கமுடியும். கதை நன்றாக இல்லாவிட்டால் பான் இந்தியா படமாக இருந்தாலும் தோல்வியடையத்தான் செய்யும். பெண்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கைவசம் மற்றொரு வாய்ப்பும் உள்ளது என்பதுதான் இந்தப் படம் சொல்லவரும் மெசேஜ். 

 

நாம் ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லும்போது மாற்றுக்கருத்து கொண்டவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். எனக்கு சர்ச்சை மிகவும் பிடிக்கும். வழக்கமான மனிதர்களை பார்த்து எனக்கு சலிப்பு தட்டிவிட்டது". இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

37 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் பெற்ற சர்ச்சை இயக்குநர்; ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

ar rahman congrats Ram Gopal Varma for he receives his B. Tech degree after 37 years

 

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுவது மற்றும் நிகழ்ச்சிகளில் நடந்துகொள்வது அவ்வப்போது சர்ச்சைகளாக மாறும். சமீபத்தில், ராஜமௌலி மீது இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் பொறாமையில் உள்ளதாகவும் அவரை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். 

 

இதனிடையே ஒரு டேஞ்சரஸ் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நடிகையின் கால் விரலை கடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்த படிப்பின் சான்றிதழை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் தேர்ச்சி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று எனது பி.டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

பட்டம் வாங்கியுள்ள ராம் கோபால் வர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.  


 

Next Story

“ராஜமௌலியை கொலை செய்ய ஒரு குழு திரண்டுள்ளது” - சீக்ரெட் சொன்ன சர்ச்சை இயக்குநர்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

ram gopal varma about rajamouli

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கோல்டன் குளோப் விருது நிகழ்வில் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக விருதைப் பெற்றது. அந்த விழாவின்போது பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்டவர்களை ராஜமௌலி சந்தித்து கலந்துரையாடும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

 

உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இயக்குநராக இருக்கும் ராஜமௌலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சர்ச்சைக்கு பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா ராஜமௌலி குறித்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். ராஜமௌலி ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாதா சாஹப் பால்கே முதல் இன்று வரை இந்திய சினிமா வரலாற்றில் ராஜமௌலி உட்பட யாரும் இந்த தருணத்தை ஒரு இந்திய இயக்குநர் கடந்து செல்வார் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் மற்றொரு பதிவில், "ராஜமௌலி, தயவு செய்து உங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். ஏனென்றால் இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் உங்கள் மீது பொறாமையில் உள்ளனர். அவர்கள் உங்களை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளனர். அந்த குழுவில் நானும் ஒரு அங்கம் தான். இந்த ரகசியத்தை நான் இப்போது வெளியில் சொல்கிறேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.