Skip to main content

“இந்த நபரை எனக்குத் தெரியாது...”- இயக்குனர் மித்ரன் எச்சரிக்கை! 

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

ps mithran

 

'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து 'ஹீரோ' என்று சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கினார் மித்ரான். தற்போது கார்த்தியை வைத்து படம் இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ப்ரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், இயக்குனர் மித்ரன் பெயரை பயன்படுத்தி பரவும் ஒரு மோசடி குறித்து ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களை எச்சரித்துள்ளார், மித்ரன். 

 

அதுகுறித்து அவர் பதிவிடுகையில், “யாரோ ஒருவர் என்னுடைய நண்பர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் நடிகர்கள் தேர்வுக்காகத் தொடர்பு எண்களைக் கேட்பதாக என்னுடைய கவனத்துக்கு வந்துள்ளது. இந்த நபரை எனக்குத் தெரியாது. பிறரிடமிருந்து தொடர்பு எண்/ புகைப்படங்களைச் சேகரிக்கும் அதிகாரத்தையும் நான் யாருக்கும் வழங்கவில்லை. இதுபோன்ற மெயில் உங்களுக்கு வந்தால் தயவுசெய்து புகார் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது" - கார்த்தி

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

karthi about sardar 2 update

 

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை இயக்குநர் மித்ரனுக்கு பரிசாக வழங்கியிருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 1 ஆண்டை நிறைவு செய்கிறது. 

 

இதையொட்டி கார்த்தி பகிர்ந்துள்ள வீடியோவில், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து படக்குழு அறிவித்த நிலையில், விரைவில் அதுபற்றிய புது அப்டேட்டை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

Next Story

'சர்தார்' பட வெற்றி - இயக்குநரை நெகிழவைத்த படக்குழு

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

Sardaar movie success producer gifted car to ps mithran

 

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

ad

 

மேலும் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. இந்நிலையில் 'சர்தார்' படத்தின் வெற்றியை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை இயக்குநர் மித்ரனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனை கார்த்தி இயக்குநர் மித்ரனுக்கு வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக தமிழ் சினிமாவில் படம் வெற்றியை முன்னிட்டு பரிசுகள் வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'விக்ரம்' பட வெற்றிக்கு கமல் கார் பரிசளித்த பின்பு சமீப காலமாக பெரும்பாலும் படக்குழுவினர் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட 'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றியை முன்னிட்டு சிம்புவுக்கு ஐசரி கணேஷ் கார் வழங்கினார். தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள் இந்த பாணியை பின்பற்றி வருவதால் தற்போது அந்த லிஸ்டில் 'சர்தார்' படமும் இணைந்துள்ளது.