Skip to main content

ரஜினி மருமகன் விசாகன், இயக்குனர் நவீன் சர்ச்சை... அறிக்கை வெளியிட்ட நவீன்...

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது  ‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’ என்று ஒரு படத்தை இயக்கி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை. அதற்கு என்ன காரணம் என்று முதலில் தெரியவில்லை. பின்னர், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட நவீன், தான் மூடர்கூடம் படத்தை அடுத்து சொர்ணா சேதுராமன் என்பவர் தயாரிப்பில் படம் எடுப்பதாக இருந்தது. அவர்தான் தற்போது இந்த படத்தை வெளியிட தடை செய்கிறார். அந்த பிரச்சனை குறித்து முழுவதுமாக தெரிவித்தார். 
 

naveen


நவீன் அளித்த அறிக்கைக்கு பதில் தரும் வகையில் சொர்ணா சேதுராமன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இயக்குனர் நவீன் தன்னிடம் படம் எடுப்பதாக பணம் பெற்றுக்கொண்டு. ஸ்கிரிப்ட் எழுதாமல் ஓப்பி அடித்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார். சம்பந்தப்பட்ட பட விஷயமாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு, அறிக்கை கொடுத்து ஊடகங்கள் மூலமாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி திசைதிருப்பி, இதிலிருந்து விடுபட நவீன் திட்டமிடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
 

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நவீன். “நான் Flash Films நிறுவனத்திடம் வாங்கியது அட்வான்ஸ் இல்லை, படத்தின் pre-production பணிகளுக்கான பணம். அவர் சொல்வதுபோல் நான் அவரிடன் படம் செய்ய காசு கேட்கவில்லை. என்னிடம் சுவர்ணா சேதுராமன் கையெழுத்திட்ட first copy agreement இருக்கிறது. நான் pre-production பணிகளுக்காக செய்த செலவு கணக்குகள், செக்னீஷன்களுக்கு கொடுத்த அட்வான்சுக்கான bank transactions அனைத்தும் முறையாக உள்ளது. என் தரப்பில் முறையான ஆதாரங்கள் உள்ளன. என் தரப்பு ஆதரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் தரப்பில் இருக்கும் விசாகனையும் அவருடைய சித்தப்பா ராகுலனையும் கேட்டாலே நான் சொல்வது உண்மை என்றும், சுவர்ணா சேதுராமன் சொவது அனைத்தும் பொய் என்றும் சொல்வார்கள். அவர்கள் மனசாட்சியின்படி உண்மை பேசுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது.
 

devarattam


நான் என் தரப்பில் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில் வழக்கை நடத்துகிறேன். சுவர்ணா சேதுராமன் ஊடகங்களில் நான் சிகிர்ப்ட் எழுதாததால் படம் நடக்கவில்லை என்றும், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக அவதூரு பரப்புகிறார். உடன் இருந்த அனைவருக்கும் அவர் சொல்வது பொய் என்று தெரியும். உண்மை மிக விரைவில் வெளிவரும்” என்று இயக்குனர் நவீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.