Skip to main content

"நீங்கள் ஒரு தூய்மையான குழந்தை" - புனித் ராஜ்குமார் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021


 

director mysskin mourns puneeth rajkumar death

 

கன்னட திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்துவந்த நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் காலமானார். பெங்களூருவில் வசித்துவந்த அவருக்கு நேற்று (29.10.2021) காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து புனித் ராஜ்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குத் திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.லசில ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்து ஒரு படம் பண்ணுவதாக பேசினார். அதனையடுத்து புனித் ராஜ்குமாரை பார்க்க பெங்களூரு சென்று அவரிடம் கதை கூறினேன். பின்னர் அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இதைப் படமாக்குவது சாத்தியம் இல்லை என அவர் வெளிப்படையாக கூறினார். 

 

புனித் ராஜ்குமார் மிகவும் எளிமையானவர். என்னைப் பார்ப்பதற்கு பார்க்கிங் பகுதிக்கு வரை வந்தார். பின்னர் கட்டியணைத்து இருவரும் ஒரு படம் பண்ணலாம் என முடிவெடுத்தோம். அன்புள்ள புனித் தம்பி நீங்கள் சினிமாவில் மட்டும் ஹீரோ இல்லை, நிஜ வாழ்க்கையிலும்  ஹீரோதான். அன்பும் நேர்மையும் உங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்துள்ளது. நீங்கள் ஒரு தூய்மையான குழந்தை, அதனால்தான் இயற்கை அன்னை அவளின் மடியில் தவழ வைக்க விரும்பியுள்ளார். எங்கள் வாழ்க்கையில் உங்களை அதிகம் மிஸ் செய்கிறோம் புனித்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியுடன் மோத ஜெயராமை தேர்வு செய்த மிஷ்கின்?

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

jayaram to play villain in vijay sethupathi, mysskin movie

 

விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் கமிட்டாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதன் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.  

 

இப்படத்தை எஸ். தாணு தயாரிப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இப்படத்தின் வில்லனை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயராம் தற்போது விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் மோதவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

ஏற்கனவே ஆண்ட்ரியா நடிப்பில் மிஸ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மிஷ்கினின் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Vijay fans are angry with Mysskin speech about leo update

 

இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது மேடையில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் டைனோசர்ஸ் பட இசை வெளியீட்டு விழாவில், "10 மணி ஆச்சு... எல்லாரும் போய் தண்ணி அடிங்க., சிகரெட் அடிங்க, தூங்குங்க" என மேடையில் பேசியது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் விஜய் குறித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவர் பேசுகையில், "லியோ பட இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடக்குது. படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். நிச்சயம் படம் வெற்றியடையும்" என்றார். 

 

இதில் விஜய்யை அவன் இவன் என்று சொல்லியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மிஷ்கினை கிண்டல் செய்தும் பொது இடத்தில் மரியாதையாக பேச வேண்டியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் சிறிய வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.