Skip to main content

“முத்தையான்னா ஜாதி இல்ல. முத்தையான்னா...” - உருக்கமாக பேசிய இயக்குனர் முத்தையா

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து  ‘தேவராட்டம்’ என்னும் படத்தை இயக்குகிறார் முத்தையா. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிக்க சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபெஃப்ஸி விஜயன் வில்லனாக நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரஸன்னா இசையமைத்துள்ளார். 
 

muthaiya

 

 

இயக்குனர் முத்தையா மீது சாதியை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார் என்ற விமர்சனம் பலர் முன் வைக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தேவராட்டம் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் இயக்குனர் முத்தையா.
 

“முதலில் தலைப்பு, இரண்டாவது போஸ்டர், மூன்றாவது ட்ரைலர், நான்காவது பாடல்கள் இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் படம் வணிகத்திற்கு சரியாக இருக்கிறது. அதன்பின்தான் திரையரங்குகளுக்கு செல்கிறது. இன்று நடிக்க பலர் வருகிறார்கள், இயக்குனராக வர பலர் வருகிறார்கள். ஆனால், படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் புதிதாக வருவதில்லை. ஒரு தயாரிப்பாளர் ஈஸியாக கிடைக்க வேண்டும் என்றால் பெரிய நடிகர் கிடைக்க வேண்டும். அப்படிதான் சினிமா சூழல் இருக்கிறது எப்போதுமே சினிமா அவ்வாறுதான் இருக்கிறது. இதனால்தான் சில சண்டை காட்சிகள், சில விஷயங்கள், சொல கமெர்ஷியல்கள் வைக்கின்றோம். மறுபடியும் இது ஒரு ஜாதி படம் கிடையாது. இது உணர்வுபூர்வமான குடும்ப பாங்கான படம். யாரோ ஒருவரை சுற்றிதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குடும்பம் என்பது அப்படிதான் அதைதான் என்னுடைய படங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் நகரங்களில் படம் எடுத்தாலும் உறவை மையப்படுத்தியே பேசுவேன். இதனால்தான் ஒரு கன்னட படத்தை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், தயாரிப்பாளர்கள் என்னை கிராமத்து கதைகளையே எடுக்க சொல்கிறார்கள். முத்தையா என்றாலே ஜாதி என்கிறார்கள். ஆனால், முத்தையா என்றால் உறவு என்று வரவேண்டும் என்பதற்காகதான் ஒவ்வொரு படத்திலும் உறவுமுறையை மையப்படுத்திய கதை எடுக்கிறேன். ஏதோ ஒரு பின்புலத்தில் அது அமைந்துவிடுகிறது. இதில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் சமாளித்துவிட முடியும். வேறு ஒருவர் பின்புலத்தில் வைத்து அது தவறாகிவிட்டால். அந்த பிரச்சனையால்தான் நான் இப்படி எடுக்கிறேன். தமிழர்கள் அனைவருமே வீரமானவர்கள்தான், பண்பானவர்கள்தான். வார்த்தைகள் வேண்டுமானால் மாறுமே தவிர, பாசம், நேசம் அனைத்து இடத்திலும் ஒன்றுதான்.” என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வில்லனாக அறிமுகமாகும் விஜய் பட ஒளிப்பதிவாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
cinematographer sukumar debut as actor

குட்டிப்புலி, கொம்பன், மருது என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமானவர் முத்தையா. அந்த வகையில் கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமும் அவரது ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் விஜய் முத்தையாவை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தில் பரத் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒளிப்பதிவாளர் சுகுமார், கும்கி, காக்கிச் சட்டை, பைரவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாவார்.

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.