Skip to main content

மதுரைக்கு யார் அடையாளம்? - இயக்குனர் முத்தையா சொல்லும் விளக்கம் 

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

'தேவராட்டம்' திரைப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறது. வெற்றிக்கு இணையாக சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருக்கிறது. படத்தில் வரும் பல விஷயங்கள், வசனங்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேசப்படுகின்றன. அதில் ஒன்று "மதுரைக்கே நாங்கதான் அடையாளம்" என்று வில்லன் பேசுமாறு இருக்கும் வசனம். இது போன்ற வசனங்கள் மதுரை குறிப்பிட்ட சமூகங்களுக்குதான் என்ற அர்த்தத்தில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. 'தேவராட்டம்' திரைப்படம் குறித்தும் இந்த சர்ச்சைகள் குறித்தும் இயக்குனர் முத்தையாவை சந்தித்து உரையாடினோம். அவர் பேசியதில் ஒரு பகுதி...

 

devarattam muthiah



"நான் எடுக்கும் படங்களில் வேண்டுமென்றே ஒரு சமூகப் பின்புலத்தைத் திணிப்பதில்லை. ஒரு போலீஸ் கதைக்கோ வேறு ஒரு கதைக்கோ பின்னணி சொல்லத் தேவையில்லை. ஆனால் கலாச்சாரம் சார்ந்த கதைகளைப் படமாக்கும்போது அது தேவைப்படுகிறது. ஒரு திருவிழாவை, கோயில் நிகழ்ச்சியையெல்லாம் காட்டும்போது ஒரு பின்னணி தேவைப்படுகிறது. உறவுகள் சார்ந்த, மண் சார்ந்த படம் எடுக்கும்போது ஒரு பின்னணி, களம் தேவைப்படுகிறது. நான், என் படங்களில் உறவுகளின் உயர்வைக் காட்டுகிறேன். அதற்கு இந்தக் களம் தேவைப்படுகிறது. அதனால்தான் என் படங்களில் அப்படி அமைக்கிறேன்.

இதே படத்தில் நான் டைட்டிலில் சித்திரை திருவிழாவைக் காட்டினேன். அதில் ஏதாவது சமூக அடையாளம் இருந்ததா? ஆனால், வேறு ஒரு கிராமத் திருவிழாவைக் காட்டணும்னா அது தேவைப்படுகிறது. மதுரை எல்லா சமூக மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழும் ஊர். என் படத்தில் வரும் வில்லன்தான் அந்த வசனத்தைப் பேசுகிறான். அதுவும் அந்தக் காட்சியையும் நீங்க பாக்கணும். காட்சிக்காகத்தான் வசனம். காட்சி பின்புலம் இல்லாமல் திடீரென அந்த வசனத்தை வைத்தால்தான் நீங்க கேக்கணும். 'டிக் டாக்'கில் ஆயிரம் வசனங்கள் வருது. ரஜினிகாந்த் பேசுன, 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்ற வசனத்தைக் கூடத்தான் மாஸாகவும் டிக் டாக் பண்ணுறாங்க, காமெடியாகவும் கூட பண்ணுறாங்க. அதுபோல இந்த வசனத்தை பண்ணுனா நான் என்ன பண்ண முடியும்? நான் எழுதும்போது இது பிரச்சனை ஆகணும்னு எழுதுறதில்லை.

 

gowtham karthik



வைகை பாலத்துக்குக் கீழ ஒரு எமோஷனலான காட்சி வைக்கிறேன். அங்க தேவர் அய்யா சிலை இருக்கு. நான் அதை வேணும்னேவா காட்டுறேன்? படத்தில் கோர்ட்டை காட்டுறேன், கக்கன் அய்யா சிலை, சிவாஜி கணேசன் சிலை எல்லாம்தான் இருக்கு. அதை நீங்க பாக்கலையா? சென்னையில வடபழனியைக் காட்டணும்னா பஸ் ஸ்டேண்டைத்தான காட்டணும்? அது மாதிரிதான் மதுரையில் சில அடையாளங்களைக் காட்டுறேன். நான் ஐந்து படம் எடுத்துருக்கேன். அதிலெல்லாம் காட்ட முடியாதா? யதார்த்தமாக நடப்பதெற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்?"

முத்தையாவின் முழு பேட்டியை வீடியோ வடிவில் காண...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.