Skip to main content

"கமல் அப்படி கேட்டதும் எனக்கு 'பக்'குன்னு ஆயிடுச்சு" - மணிரத்னம் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் கடந்த நவம்பர் 7 அன்று அவரது ரசிகர்களாலும் மக்கள் நீதி மய்ய தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, அவரது திரைப்பயணத்தின் 60ஆம் ஆண்டாகவும் இருக்கிறது. இதனை முன்னிட்டு தன்னுடைய பிறந்த நாளுக்கு மறுநாள் சென்னையில் தனது அலுவலக வளாகத்தில் தனது குருவான இயக்குனர் கே.பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்தார் கமல். இந்நிகழ்வில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதே தினத்தில் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவும் நிகழ்ந்தது.

 

maniratnam



நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்னம், 'நாயகன்' பட சமயம் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்தார். "நான் கமலிடம் முதலில் படத்தின் கதையை மேலோட்டமாகத்தான் கூறினேன். நான் சொன்னவுடன் அந்தக் கதை அவருக்குப்  பிடித்துவிட்டது. அவர் 3 மாதங்களில் ஷூட்டிங் ஆரம்பித்து விடலாம் என்று கூறினார். நானும் வந்துவிட்டேன். பின்னர் யோசிக்கும்பொழுதுதான் இது பீரியட் ஃபிலிம் என்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என்று எனக்கு விளங்கியது. ஆனால், நாங்கள் அப்போது பேசிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள், மதிய உணவு நேரம் வரும் முன்பே ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் வேலையை முடித்து அனுப்பிவிட்டால் அதனால் ஏற்படும் செலவு குறையுமே என்று பார்ப்பவர்கள். நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டது அப்படி.


அடுத்த நாளே மீண்டும் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டு கமலை சந்தித்து நான் நிலைமையை விவரித்தேன். "எடுத்தா நல்லா எடுக்கணும், இல்லைனா ஒன்னு என்னை விட்ருங்க, இல்ல இந்தப் படத்தை விட்ருங்க"னு சொன்னேன். "சரி இருங்க வறேன்"னு சொல்லிட்டுப் போனார். நான் வேற ஏதோ வேலையா போறாருன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து அவர் பேசிக்கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர்கள் வந்துட்டாங்க. அப்புறம்தான் தெரியுது அவர் போய் ஃபோன் பண்ணி அவுங்கள வர வச்சிருக்கார் என்பது.

தயாரிப்பாளர்களிடம் பேசிய கமல், என்னையும் வச்சுக்கிட்டே அவர்களிடம் சொன்னார், "மணி சொல்றார்... நீங்க மதிய உணவுக்கு முன்னாடியே ஜூனியர் ஆர்டிஸ்டுகளை முடிச்சு அனுப்பிருவீங்களாமே... இப்படி இருந்தா எப்படி படம் பண்ணுவது?" என்று கேட்டார். கமல் இப்படி கேட்டதும் எனக்கு 'பக்'குன்னு ஆயிருச்சு. அந்த தயாரிப்பாளர்கள், "இல்ல சார். இதுவரை வேற மாதிரி. ஆனா, இந்தப் படம் பெருசா பண்ணணும் என்றுதான் முடிவுபண்ணி இறங்கியிருக்கோம்" என்றனர். அப்படி பேசி பின்னர் தொடங்கியது 'நாயகன்'. இந்த சமபவத்தில் நான் கமலிடம் கற்றுக்கொண்டது அவருடைய மேலாண்மையை. ஒரு பிரச்சனையை தனித்தனியாகப் பேசிக்கொண்டு இழுத்துக்கொண்டே போகாமல், உடனே நேரில் பேசி தீர்த்து அடுத்த வேலைக்கு நகர்ந்தார். இந்த மேனேஜ்மண்ட்டை அவரிடம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'நாயகன்' சமயத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார்.         

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.