அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இயக்குனர் மணிரத்னம் தனது மனைவியின் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலானது சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடிக்க, பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார் இயக்குனர் மணிரத்னம்.
ADVERTISEMENT
ரசிகர்களுடன் மணிரத்னம் கலந்துரையாடியபோது, பிரபல மலையாள இயக்குனர் லிஜோ பெல்லிசரியும் அந்த லைவ் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று சுஹாசினி சுட்டிக்காட்டி, உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனரும் இதை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
ADVERTISEMENT
அதனையடுத்து பேசிய மணிரத்னம், “நான் உங்களுடைய ரசிகன். இந்த காலகட்டத்தின் சிறந்த இயக்குனராக இருக்கிறீர்கள். வாழ்த்துகள்” என்றார்.
மேலும் “அவருடைய படங்களில் நான் ஒன்றுதான் பார்த்திருக்கிறேன், மணிரத்னம் நிறைய படங்கள் பார்த்திருக்கிறார்” என்று அவருடைய படங்களின் பெயரை சுஹாசினி சொல்ல, மணிரத்னமும் அங்கமாலி டைரீஸ், ஆமின் படங்களின் பெயரை குறிப்பிட்டு முடித்தார்.
Show comments