Skip to main content

நாங்குநேரி வன்கொடுமைக்கு ரஞ்சித் - மாரி செல்வராஜ் படங்கள் காரணமா? - இயக்குநர் கெளதமராஜ் பதில்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

director Gowthama raj about pa.ranjith, mari selvaraj and nanguneri issue

 

சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து 'கழுவேர்த்தி மூர்க்கன்' பட இயக்குநர் கௌதம ராஜ் தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அதில் சில தொகுப்பு...

 

"சமூகம் எப்போதும் தீங்குகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்? என்று சொல்பவர்கள் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இங்கு நகரம் வேறு, கிராமம் வேறு. நகரத்தில் சாதி பார்த்தால் வேலை நடக்காது. அதனால் யாரும் சாதி பார்ப்பதில்லை என்பது போன்ற கருத்துக்களை நகரத்தில் இருப்பவர்கள் பரப்புகிறார்கள். ஆனால் கிராமம் அப்படியில்லை. நகரத்தில் இருப்பவர்கள் சாதி பார்க்காதது போல் நடந்துகொள்வார்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது. 

 

சமூகம் முழுவதுமே சாதிவெறியால் நிறைந்திருக்கிறது என்பது போன்ற ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டியதில்லை. நாங்குநேரியில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பசங்களுக்கு யார் அந்த வெறியை ஊட்டினார்கள் என்பதை அறிய வேண்டும். நிச்சயம் அவர்களுடைய பெற்றோருக்குத் தான் இதில் அதிக பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள், நண்பர்களுக்கும் இதில் நிச்சயம் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் வாழும் ஊரும் அவர்களுடைய செயல்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

 

இன்றும் ஊருக்கு வெளியே தான் தலித்துகள் வாழ்ந்து வருகின்றனர். சாதி சங்கங்களுடைய கொடிகள் கிராமங்கள் முழுவதும் இருக்கின்றன. இதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும். சாதிக் கட்சித் தலைவர்கள் பலரும் மிகுந்த வசதியோடு வாழ்கின்றனர். அவர்களுடைய சாதிகளுக்கு அரசாங்கம் வழங்கும் உரிமைகள் என்னென்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. முதலில் அதை ஒழுங்காகச் சொல்லிவிட்டு அந்த மக்களுக்காக நிற்பதாக அவர்கள் கூறட்டும். அந்த மக்களுக்கு இவர்கள் எந்த திட்டத்தையும் பெற்றுத் தருவதில்லை. சுயநலத்துக்காக அவர்களைக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களுக்குத் தெரியும். 

 

மக்களை நல்வழிப்படுத்த இவர்கள் எந்த வகையிலும் முயல்வதில்லை. தங்களுடைய வளர்ச்சிக்காக மக்களை இவர்கள் மந்தைகள் போல் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. நாங்குநேரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு தருமபுரியிலும், உடுமலைப்பேட்டையிலும் நடந்தவை தான். தமிழ்நாடு அரசியல் விழிப்புணர்வு பெற்ற மண் என்பதால் இதை நாம் இங்கு சீரியஸாக விவாதிக்கிறோம். வடஇந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடக்கும். நாங்குநேரியில் குற்றம் செய்த மாணவனின் மனதில் நஞ்சை விதைத்தவர்கள் மீதும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஓபிசி மக்களுக்கும் பட்டியலின மக்கள் போலவே இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இங்கு அனைவரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைத் தூண்டிவிடும் வேலை தொடர்ந்து நடந்து வருகிறது. பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் தங்களுடைய படங்களில் சொல்வது அவர்களுடைய வலியை. மற்றவர்கள் பேசுவது சாதிப்பெருமையை. உணவில் சுவை இல்லை என்பதற்காக நடத்தும் போராட்டமும், உணவே இல்லை என்பதற்காக நடத்தும் போராட்டமும் ஒன்றல்ல. இந்தப் புரிதல் அனைவருக்கும் வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.